கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குன்றத்தூர் சிறப்பு எஸ். ஐ..!

Default Image

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குன்றத்தூர் சிறப்பு எஸ். ஐ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டுமே ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாண்டி முரளி. இவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்