“குமுளில் கொட்டிதீர்த்த கனமழை”நிலச்சரிவால் வானங்கள் செல்ல அனுமதி மறுப்பு..!!
தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் குமுளியில் சுற்று வட்டாரங்களில் பெய்த கன மழையினால் குமுளி மலைச்சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஆகஸ்டில் பெய்த மழையினால் லோயர்கேம்பில் மலைச்சாலையில் சுமார் மூன்று இடங்களில் மண் சரிந்து சுமார் 15 நாட்களுக்கு மேலாக போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது.
இந்நிலையில்மலைச்சாலையில் மண் சரிந்த இடங்களில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி போக்குவரத்து துவக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் சரிவு ஏற்பட்ட இடங்களில் ஏற்கனவே அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அங்கு மலை சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU