சகோதரரின் இறப்பு செய்தி கேட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மருத்துவமனையில் அனுமதி.!

Default Image

எம்பி வசந்தகுமார் இறப்பு செய்தி கேட்ட அவரது சகோதரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி ஆனந்னுக்கு அதிர்ச்சியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியும், வசந்த் & கோ நிறுவனத்தின் உரிமையாளருமான வசந்தகுமார் இன்று காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இவரது இறப்பு செய்தி கேட்டறிந்த வசந்தகுமாரின் சகோதரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி ஆனந்தன் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹைதிராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குமரி ஆனந்தன் அவர்கள், முன்னாள் தமிழக  பாஜக தலைவரும், தற்போதைய தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தராஜனின் தந்தை ஆவார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்