தஞ்சை பெரிய கோவிலில் 2 மொழிகளில் குடமுழுக்கு -உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல்

Published by
Venu
  • தொல்லியல் துறையின் முறையான அனுமதி பெறவில்லை எனவே  குடமுழுக்கு  நடத்த தடை விதிக்கவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • இந்த மனு மீதான விசாரணையில், தமிழ், சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. 

தஞ்சாவூர் பெரிய கோவிலில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் குடமுழுக்கு தமிழில்  நடத்த வேண்டும் என  ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.ஆனால் ஆண்டாண்டு காலமாக ஆகம விதிகளின் படியே குடமுழுக்கு நடத்த வேண்டும்  என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் சரவணன் என்பவர் முறையிட்டார். அதில் தஞ்சை பெரிய கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல்  நடத்த உள்ளனர்.புராதன தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த முறையான அனுமதி பெறவில்லை .எனவே குடமுழுக்கு நடத்த தடை விதிக்கவேண்டும் என அந்த முறையீட்டில் கூறியிருந்தார்.பின்னர் நீதிபதி வழக்கறிஞர் சரவணன் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் இன்று விசாரிப்பதாக கூறினார்.

இதனையடுத்து இன்று வழக்கறிஞர் சரவணன்  தனது கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ததால் அவர் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அதில், தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குடமுழுக்கு என்ன மொழிகளில் செய்யப்படும் என்பதை நாளை  பிரமாணபத்திரமாக தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு  உத்தரவு பிறப்பித்து வழக்கை நாளை ஒத்திவைத்தது. குடமுழுக்கு தொடர்பாக ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், பெ.மணியரசன் உள்ளிட்ட பலர் மனுதாக்கல் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

”வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”- வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!”வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”- வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

”வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”- வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…

21 minutes ago
”எனது உடலில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் ஓடுகிறது” – பிரதமர் மோடி.!”எனது உடலில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் ஓடுகிறது” – பிரதமர் மோடி.!

”எனது உடலில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் ஓடுகிறது” – பிரதமர் மோடி.!

ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…

39 minutes ago
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.., நாளை மறுநாள் இந்த 2 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.!உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.., நாளை மறுநாள் இந்த 2 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.!

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.., நாளை மறுநாள் இந்த 2 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.!

சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…

1 hour ago
இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…

4 hours ago
“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

8 hours ago
நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

8 hours ago