ஓலா நிறுவனம் சார்பில் 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை அமைக்க உள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம் சார்பில் 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை அமைக்க உள்ளது. ஓலா நிறுவனம் அமைக்கவுள்ள ஆலை மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ஓலா நிறுவனம் அமைக்கும் ஆலையில் 2 விநாடிக்கு ஒரு மோட்டார் சைக்கிள் உற்பத்தி செய்யப்படும். ஆலையில் வாகன உற்பத்தி பணிகளுக்காக 3,000 ரோபோக்கள் பணியில் ஈடுப்பட உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுப்படுவதை குறைக்கவும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மின்சார வாகனத்திற்கு 2030 வரை மாநில ஜி.எஸ்.டி 100% திரும்ப வழங்கப்படும். இத்தகைய நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும்போது 100% முத்திரைதாள் கட்டண விலக்கு என தெரிவித்தார்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…