கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர், முன்பு படித்த சின்மயா பள்ளியின் ஆசிரியர் வருண் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, சில பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் யாரையும் சும்மாவிடக்கூடாது என்று கைப்பட எழுதியிருப்பது அவர் அனுபவித்த வேதனையை சுட்டிக் காட்டுகின்றது.
இதற்கிடையில்,பாலியல் தொல்லை தொடர்பாக அந்த மாணவி தனது பெற்றோரிடம் ஏற்கனவே சொல்லி அழுதுள்ளார்.இது தொடர்பாக,பள்ளி நிர்வாகத்தில் பெற்றோர் புகார் அளித்தபோது ஆசிரியரின் மீது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் நடவடிக்கை எடுக்காத நிலையில்,அவர் வேறு பள்ளிக்கு மாறியுள்ளார்.எனினும்,ஆசிரியரின் பாலியல் தொல்லை தொடர்ந்ததால் மனமுடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது பெற்றோர்,மாணவர்கள்,பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும்,பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதனையடுத்து,மாணவியின் தற்கொலைக்கு காரணமான இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கோவை போலீசார் அதிரடியாக கைது செய்து, அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.அதன்பின்னர்,கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார் அவரின் உடலை பரிசோதனை செய்த பின்னர் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி,கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து,கோவை சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன்மீது போக்சோ வழக்கும் பதியப்பட்டுள்ளது.மேலும்,அவரை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில்,சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது.குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்”,என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…