கொலை முயற்சி வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு- நீதி மன்றம்.!

Default Image

கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, தூத்துக்குடி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. 

திமுக நகர செயலாளரை கொலை செய்ய தூண்டிய வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு திமுக வின்  இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், திமுக நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது தாக்குதல், பெட்ரோல் வீச்சு, மற்றும் கார் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றது, இதனையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சியின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்