கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் போலீசார் விசாரணை.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. உதகை பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வழக்கறிஞருடன் எஸ்டேட் மேலாளர் நடராஜன் கூடுதல் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் மற்றும் ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மேலாளர் நடராஜனிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று ஏடிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோடநாடு வழக்கு விசாரணை உதகை நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 1ம் தேதிக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…