கொடநாடு வழக்கு.., உதகை நீதிமன்றத்திற்கு வந்த சயான்..!

Published by
murugan

கொடநாடு வழக்கில் இன்று நடைபெறும் விசாரணைக்காக, சயான் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு உதகை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

கொடநாடு கொள்ளை, கொலை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கோவையை சேர்ந்த பேக்கரி மேலாளர் சயான், வாலையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டனர். கொடநாட்டில் கொள்ளையடிக்கும் போது அங்கு இரவு காவலில் ஈடுபட்டிருந்த ஓம்பகதூர் என்ற காவலாளியை கொலை செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கனகராஜ், வாலையாறு மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். பின்னர், சயான் உள்ளிட்ட 10 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கானது 4 ஆண்டுகளாகவே உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வரும் வருகிறது. இதற்கிடையில், கடந்த 13-ம் தேதி கோத்தகிரி போலிசார் சயானிடம் மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா சாயானிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை  சயான் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், உதகை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணைக்கு இன்று வருகிறது. இந்த வழக்கில் இன்று நடைபெறும் விசாரணைக்காக, வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயான் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு உதகை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

Published by
murugan
Tags: -Kodanadu

Recent Posts

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

3 minutes ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

49 minutes ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

2 hours ago

அன்னா கிராம்லிங்க்கு செக்! கண்ணை மூடி கொண்டு வீழ்த்தி அசத்திய மேக்னஸ் கார்ல்சன்!

ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…

2 hours ago

கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…

3 hours ago

ஒண்ணும் தெரியாம விஜய் பேச வேண்டாம்! பதிலடி கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…

3 hours ago