கோடநாடு வழக்கு – குற்றச்சாட்டப்பட்ட 4வது நபரிடம் தனிப்படை விசாரணை!

Published by
பாலா கலியமூர்த்தி

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. தினந்தோறும் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் விபத்தில் இறந்த கனகராஜ் பணிபுரிந்த உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கோடநாடு வழக்கில் 10 நபர்கள் மீது குற்றச்சாட்டப்பட்ட நிலையில், அவர்களில் 4வது நபரான ஜம்ஷீர் அலியிடம் இன்று ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கோடநாடு விவகாரம் தொடர்பாக ஜாமினில் தளர்வுகள் கேட்ட வாளையார் மனோஜ் வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது. ஜாமீனில் தளர்வுகள் கேட்ட மனு மீதான விசாரணையை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பித்தக்கது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடைவிதிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், கோடநாடு வழக்கு தீவிரமடைந்துள்ளது. அதன்படி, இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு மேலும் துரிதப்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்றும் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எப்போது கைது செய்யப்பட்டார்கள் என்பது தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை… உணர்ச்சிவசப்பட்ட காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா!

எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை… உணர்ச்சிவசப்பட்ட காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா!

டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

3 minutes ago

ராஜினாமா செய்ய தயாரா? பாஜகவுக்கு சவால் விட்ட செல்வப்பெருந்தகை!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…

28 minutes ago

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…

2 hours ago

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

2 hours ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

3 hours ago