கோடநாடு வழக்கு – அதிமுக நிர்வாகியிடம் தனிப்படை போலீசார் விசாரணை!

Published by
பாலா கலியமூர்த்தி

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணை தீவரப்படுத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓபிஎஸ், சசிகலா தரப்பு, அப்போலோ தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. இதனால் ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது. மறுபக்கம் கோடநாடு வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர வியாபாரியான சஜீவன், கோடநாடு பங்களாவில் உள் அரங்க வேலைப்பாடுகளை செய்தவர். இந்த வழக்கில் ஆரம்ப முதலே சஜீவன் மீது குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு வழக்கு தொடர்பாக இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. முன்னதாக சசிகலா,  ஆறுக்குட்டி ஆகியோரிடம் நடந்திருந்தது தனிப்படை போலீஸ். இந்த வழக்கு தொடர்பாக சயான் உள்ளிட்ட 10 பேரை காவல்துறை கைது செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அந்த படத்தை பார்த்து தான் கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ வாய்ப்பு கொடுத்தாரு! மனம் திறந்த பூஜா ஹெக்டே!

அந்த படத்தை பார்த்து தான் கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ வாய்ப்பு கொடுத்தாரு! மனம் திறந்த பூஜா ஹெக்டே!

சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…

1 hour ago

கும்பமேளா கூட்டநெரிசல் : ‘ அவ்வளவு பெரிய சம்பவம் இல்லை ‘ பாஜக எம்பி ஹேம மாலினி பேச்சு!

அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…

2 hours ago

டி20-யில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி! ஒரு நாள் தொடரில் வாய்ப்பு கொடுத்த இந்திய அணி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…

3 hours ago

இந்தியாவின் முதல் 3டி-ஸ்டார் தொழில்நுட்பம்! Vivo V50 போனின் சிறப்பு அம்சம்!

டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…

3 hours ago

10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகள்., 12 கோடி கழிவறைகள்., பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

4 hours ago

தொடங்கியது இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்! கடும் போக்குவரத்து நெரிசல்!

மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…

5 hours ago