கோடநாடு வழக்கு – அனீஸ், ஷாஜி ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!

Default Image

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளான அனீஸ், சாஜி ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜிதின் ராய் உறவினர் ஷாஜியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. உதகை பழைய மாவட்ட எஸ்பிஐ அலுவலகத்தில் தனிப்படை காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 38-வது அரசுத்தரப்பு சாட்சியாக இருக்கும் அனிஷிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். ஏற்கனவே சாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அனிஷிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளான அனீஸ், சாஜி ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. நீலகிரி மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், சம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்