தனிப்படை 3 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், விசாரணை முடிந்து விவேக் ஜெயராமன் வெளியேறினார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் கோடநாடு பங்களாவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். கொடநாடு கொலை வழக்கில் பெரிதாக முன்னேற்றம் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி தமிழக அரசு தரப்பில் கொடநாடு வழக்கை மறுவிசாரணை செய்யவேண்டும் என தொடரப்பட்ட மனுவுக்கு உதகை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனையடுத்து மீண்டும் இந்த வழக்கு விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், கோவையில் வைத்து சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம் கோநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் முறையாக விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடைபெற்றது. கோடநாடு பங்களா மேலாளரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்தப்பட்டது. கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சசிகலா அண்ணன் மகன் விவேக்கிடம் தனிப்படை 3 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், விசாரணை முடிந்து விவேக் ஜெயராமன் வெளியேறினார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…