தனிப்படையால் அதிரடி கைது..!நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு..!!

Default Image

கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி சரிதா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய குற்ற பிரிவு போலீசார் போதிய ஆதாரம் தாக்கல் செய்யாததால் நீதிபதி சரிதா இருவரையும் விடுவித்து உத்தரவிட்ட நிலையி காவல்துறையின் வழக்குப்பதிவு மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் கேள்விகளுக்கு காவல்துறை உரிய விளக்கமளிக்காததால் கைது செய்யப்பட்ட இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி சரிதா மறுத்து விடவிட்டார்.இந்நிலையில் மீண்டும் அவர்கள் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்தில் மனோஜ்,சயன் இருவரும் நீதிபதி சரிதா முன்பு மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதில் இருவருக்கும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்