கோடநாடு வழக்கில், அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை போலீசார் விசாரணை.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் சஜீவன் சகோதரர் சிபியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சஜீவனிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று அவரின் சகோதரர் சிபியிடம் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு கொள்ளையர்களை கூடலூர் சோதனை சாவடியில் இருந்து விடுவித்ததாக கூறப்படும் தகவலின் அடிப்படையில் சிபியிடம் விசாரணை நடைபெறுகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக யார், யாரிடம் விசாரிக்கப்படாமல் இருந்தார்களோ, அவர்களை தற்போது தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக சசிகலா, விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, சஜீவன் உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது சஜீவன் சகோதரர் சிபியிடம் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு அரங்கேறியது. கொள்ளையர்கள் 24ம் தேதி அதிகாலை கூடலூர் வழியாக கேரளாவுக்கு தப்ப முயன்றபோது காவல்துறை அவர்களை பிடித்தது. அப்போது, சஜீவன் சகோதரர் சிபி ஆலோசனை பேரில் காவல் நிலையத்தில் நேரடியாக அவர் கையொப்பம் இட்டு, ஜாமீன் கொடுத்த அடிப்படையில் கொள்ளையர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…