கிரண்பேடியால் தான் புதுவையில் கொரோனா நோயாளிகளுக்கு சுகாதாரத்தை மேம்படுத்த முடியவில்லை -புதுவை அமைச்சர் காட்டம்!

Published by
Rebekal

புதுவையில் சுகாதார பணிகளை மேற்கொள்ள கிரண்பேடி தடையாக இருப்பதாக புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் காட்டம்.

புதுச்சேரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாகவும் அங்குள்ள கொரோனா அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் அடிக்கடி எழுந்து வரக்கூடிய புகார் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சருக்கு வந்த நெருக்கடியின் பெயரில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்பொழுது அங்கு உள்ள கழிவறைகள் சுத்தமாக இருக்கிறதா, நோயாளிகளுக்கு வழங்கப்படக் கூடிய உணவு தரமானதாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அவர் நிச்சயம் இன்னும் தரமான உணவுகளை வழங்க அரசு கூடுதல் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.

மேலும் இன்னும் அதிக சுகாதாரமாக மருத்துவமனையை வைத்திருக்க பணியாளர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இதன் பின்பு வீடியோ பதிவில் பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்த அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறேன். மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் எனவும், ரேஷன் கடை மூலம் விநியோகிக்க கூடாது எனவும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் தடை செய்கிறார். அரிசி வழங்குவது ஆசிரியர்கள் வேலை இல்லை ரேஷன் கடை மூலம் இலவச அரிசி வழங்கினால்  5 நாட்களில் மக்களுக்கு வழங்கி விடலாம்.

மேலும் கிரண் பேடி தன்னை ஒரு மருத்துவர் போல நினைத்துக் கொண்டு தவறான முடிவு எடுத்து வருகிறார். கொரோனா மருத்துவமனையில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக கூடுதல் சுகாதார பணியாளர்கள் நியமிப்பதற்கு தடையாக இவர் இருக்கிறார் என்று கூறிய அமைச்சர், கிரண்பேடி ரியல் ஹீரோ அல்ல, முடிந்தால் கொரானா மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து அங்குள்ள வசதிகளை மேம்படுத்துங்கள். இல்லை என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பு தூங்கியது போலக் தூங்கிக் கொண்டே இருங்கள் என ஆவேசத்துடன் கூறியுள்ளார் புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.

Published by
Rebekal

Recent Posts

புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…

27 minutes ago

Live : தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

33 minutes ago

பயணிகளின் கவனத்திற்கு!! பராமரிப்பு பணி… இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…

44 minutes ago

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடம் அறிவிப்பு.! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…

1 hour ago

சிதம்பரத்தில் பரபரப்பு.! திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு.!

கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…

2 hours ago

டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கொடுத்த வாக்குறுதி! 1 மணி நேரம் பேசியது என்ன?

வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…

2 hours ago