கிரானைட் அதிபர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு மேலூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கிரானைட் வழக்கில் கிரணைட் அதிபர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு மேலூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.கிரணைட் கொள்ளையானது கீழவளவு, கீழையூர், இடையப்பட்டி, திருவாதவூர் உள்ளிட்ட இடங்களில் அரசு புறம்போக்கு இடங்கள், கண்மாய்களில் அனுமதி இல்லாமல் கிரானைட் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டதாகவும், வெடிவைத்து சேதப்படுத்தப்பட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் காவல் நிலையங்களில் உள்ள வழக்குகள் மேலும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்குகள் உட்பட 43 வழக்குகள் இன்று மேலூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
அப்போது விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாத பி.கே.எஸ். கிரானைட் அதிபர் செல்வராஜ், தீபா இன்பக்ஸ் இந்தியா கிரானைட் நிறுவன உரிமையாளர் சந்திரன் மற்றும் அவரது மனைவி சந்திரா, வெடிமருந்து வினியோகம் செய்த சேலத்தை சேர்ந்த மோகன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.
மேலும் இந்த கிரணைட் முறைகேடு நடந்துள்ளதை வெளிவுலகிற்கு அம்பலபடுத்தி,தீவிரமடைய செய்தவர் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியராக பணிபுரிந்த கசகாயம் ஐஏஸ் ஆவார்.இந்த வழக்கில் சாட்சியங்களை அழித்து விடுவார்கள் என்று நடு இரவில் சுடுகாட்டில் தங்கி தடயங்களை பாதுகாத்த நேர்மையான அதிகாரி சகாயம் என்பது குறிப்பிடத்தக்க்து.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…