மோசடி மன்னன்.! உஷார் மக்களே ராணுவ அதிகாரி எனக் கூறி ‘OLX-ல்’ அரங்கேற்றிய திருட்டு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • இணைய தளமான OLX ல் பிரமிள் குமார் என்பவர் ராணுவப் பிரிவில் வேலை பார்ப்பதாகக்  கூறி போலி அடையாளத்தை காட்டி ராணுவ பைக் விற்க இருப்பதாகவும் அந்த விளம்பரத்தில் கூறியுள்ளார்.
  • இதை நம்பி பாலமுருகன் என்பவர் பைக்கை வாங்குவதற்கு முயன்று கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் பணம் எடுத்தாக மோசடி செய்த போலி ராணுவ வீரர் மீது புகார் அளித்துள்ளார். இதை அவர் உட்பட 8 பேரை ஏமாத்தியுள்ளார் என தெரிய வந்தது.

ஆன்லைன் விற்பனை தளமான OLX-ல் பிரமிள் குமார் என்பவர் விளம்பரம் ஒன்றில் நான் சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவப் பிரிவில் வேலை பார்ப்பதாகவும், பணியிட மாற்றம் காரணமாக வேறு மாநிலத்திற்கு செல்ல இருப்பதால் நான் பயன்படுத்திய ராணுவ பைக் விற்க இருப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் அந்த விளம்பரத்தை பார்த்த சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் ஒருவர், ராணுவ பைக் என்பதால் அதன் தரம் நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அவரை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களைக் கேட்டுள்ளார்.

அப்போது ராணுவத்தில் தான் வேலை பார்க்கிறேன் என்பதை உறுதி செய்யும் வகையில் ராணுவ அதிகாரிகளுக்கு பொருட்கள் வழங்கப்படும் ஐடி கார்டுகள், மற்றும் ராணுவ சீருடையுடன் கையில் ஏ.கே. 47 துப்பாக்கி ஏந்தி நிற்பது போன்ற பல புகைப்படங்கள் ஆகியவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பாலமுருகனுக்கு அனுப்பிய அவர், நான் ராணுவத்தில் தான் வேலை பார்க்கிறேன் என உறுதியாகக் கூறியுள்ளார்.

இதனை நம்பிய பாலமுருகன், ராணுவ இரு சக்கர வாகனத்தை வாங்குவதற்கு முதல் தவணை தொகையாக ரூ.5000 பிரமிள் குமாரின் கூகுள் பே கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இதன் பின்னர் அந்த பணத்துக்கு ராணுவ முத்திரையுடன் கூடிய ரசீதை பாலமுருகனுக்கு அனுப்பியுள்ளார். இதன் பின்னர் மறுநாள் காலையில் எழுந்து தன்னுடைய செல்போனை பார்த்த பாலமுருகன் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் அவரது கூகுள் பே மூலம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து பாலமுருகன் தன்னுடைய பணம் யாருடைய வங்கிக் கணக்கிற்கு சென்றது என்பதை நண்பர் ஒருவரின் செல்போன் மூலம் கண்டுபிடிக்க முயன்றுள்ளார். அப்போது நண்பரின் செல்போனிலிருந்து பிரமிள்குமாரை OLX மூலம் தொடர்பு கொண்ட போது, தனக்கு அனுப்பிய ஐடி கார்டுகளை நண்பரின் செல்போன் எண்களுக்கும் அனுப்பியிருந்ததைப் பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் தன்னைப் போலவே 8க்கும்  மேற்பட்டோரை ஏமாற்றிய அதிர்ச்சித் தகவலும் பாலமுருகனுக்கு தெரிந்தது. இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் புகார் அளித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…

1 hour ago

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

1 hour ago

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

2 hours ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

2 hours ago

அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…

2 hours ago

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம், வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…

2 hours ago