1000 ரூபாய் பிச்சை சர்ச்சையும்… குஷ்பூ கொடுத்த அதிரடி விளக்கமும்…

Published by
மணிகண்டன்

Khushbu : நேற்று சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் குஷ்பு பேசியபோது ஒரு சர்ச்சை கருத்தை குறிப்பிட்டார்.

Read More – அமலுக்கு வந்த குடியுரிமை சட்டம்.! முதல்வர் ஸ்டாலின் முதல் தவெக தலைவர் விஜய் வரை கடும் எதிர்ப்பு.!

அதாவது, தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா.? போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் திமுகவின் ஆள் தானே.? அதற்கு திமுக முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்.? போதை பொருளுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. தமிழ்நாட்டு தாய்மார்களின் பிரச்சனையை அவர்கள் தீர்த்து வைக்கவில்லை என்று குஷ்பூ பேசினார்.

இதில், தமிழக அரசு மாதந்தோறும் தகுதி வாய்ந்த குடும்பதலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை ‘பிச்சை’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Read More – குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன? இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்? விரிவான தகவல்

இந்த கண்டன பேச்சுகள் குறித்து தற்போது தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்துள்ள குஷ்பு அதில், 1982ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் செயல்படுத்திய இலவச உணவு திட்டத்தை பிச்சை என முரசொலி மாறன் விமர்சித்து இருந்தார். பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்வதை முன்னாள் அமைச்சர் பொன்முடி ஓசி என விமர்சித்தார். அப்போதெல்லாம் நீங்கள் எதுவும் சொல்லவில்லையே என கூறினார்.

Read More – நாடு முழுவதும் CAA குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு

மேலும், தமிழகத்தில் பலர் குடிகாரர்களாக மாறியதால் தாய்மார்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உங்கள் ஆயிரம் ரூபாய் தேவை இல்லை. இந்த பிரச்சனையை சரி செய்தாலே போதும். அடுத்த தலைமுறையை பாதுகாக்க முதலில் டாஸ்மாக்கை நிறுத்துங்கள். அடுத்த 14 தலைமுறை எதிர்காலத்தை பாதுகாக்க திமுகவுக்கு பணம் தேவை. எனவே உங்கள் பொய் பிரச்சாரத்தை தொடருங்கள் என தனது தரப்பு விளக்கத்தையும், கண்டனத்தையும் குஷ்பூ கூறியுள்ளார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

10 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

11 hours ago