இந்தியாவுக்காக வாக்களியுங்கள்.! குஷ்பூவின் பதிவால் குழம்பிய பாஜகவினர்.!

Published by
மணிகண்டன்

Election2024 : பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ #Vote4INDIA என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தொடங்கி தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்னும் 1 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற உள்ளதால், இதுவரையில் வாக்களிக்காதோர் வாக்குசாவடியை நோக்கி விரைந்துள்ளனர்.

பல்வேறு அரசியல், சினிமா பிரபலங்கள் வாக்களித்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அனைவரும் வாக்களியுங்கள் என பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பூவும் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்து அதனை சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

அதில், #Vote4INDIA எனும் ஹேஸ்டேக்கை பதிவிட்டு இருந்தார். இதனால் பாஜக தொண்டர்கள் குழப்பமடைந்தனர். ஏனெனில், தேசிய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு NDA எனும் தேசிய ஜனநாயக கூட்டணி என்றும், காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A) என்ற பெயரும் வைக்கப்பட்டு இருந்தது.

காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், அதன் ஆதரவு கட்சியினர் என பலரும்  #Vote4INDIA எனும் ஹேஸ்டேக்கை பயன்படுத்தி வரும் நிலையில், பாஜக பிரமுகர் குஷ்பூவின் இந்த பதிவு பாஜக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

3 minutes ago

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்.! கோவா அணியில் கேப்டன் பதவி?

மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…

8 minutes ago

கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி விஜய் என்கவுண்டர்.!

கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.…

1 hour ago

அப்போ கேப்டனா இருந்தேன் ஆனா இப்போ? மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…

3 hours ago

‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!

குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…

3 hours ago

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

4 hours ago