கடந்த சில நாட்களாக மத்திய அரசை,அரசியல் தலைவர்கள் பலரும் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு வருகின்றனர்.இதனால்,மத்திய அரசுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,’மக்கள் எப்போதும் அழைப்பது போல் ‘மத்திய அரசு’ என்றே அழைக்கலாம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்,மத்திய அரசை “பாரத பேரரசு” என அழைப்போம்,என்று பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பல ஆண்டுகளாக எதிர்ப்பில் இருந்தபோதிலும்,மத்திய அரசு என்று அழைப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.எங்கள் தமிழக மாநிலத்தில்,தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. எனவே,தமிழகத்தில் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என அழைத்தால்,நாங்கள் ‘பாரத பேரரசு’ என்று அழைப்போம்.இது, அவர்களுக்கு மேலும் புரிந்துகொள்ள உதவும் என்று நான் நம்புகிறேன்.
மேலும்,மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறவர்கள் அனைவரும்,மத்திய அரசின் அதிகபட்ச நலன்களை அனுபவித்து வருபவர்கள்தான்”,என்று கூறி பதிவிட்டுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…