“பள்ளிக்கட்டணத்தை ரத்து செய்யுங்கள் அங்கிள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய இளம் சாதனையாளர் கெவின்..!

Published by
Edison

“கொரோனா தொற்று காலத்தில் பள்ளிக்கட்டணத்தை ரத்து செய்யுங்கள் அங்கிள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,இளம் சாதனையாளர் கெவின் ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.இந்தக் கடிதம் தபோது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் கொரோனா தொற்றின் காரணமாக கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயதே ஆன இளம் உலக சாதனையாளர் கெவின் ராகுல் என்ற சிறுவன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் கெவின் ராகுல். இவர் ஒரு நிமிடத்தில் 150 கார்களுடைய லோகோக்களின் பெயர்களை சொல்லும் திறமையுடையவர்.இதனால்,ஆசிய சாதனை புத்தகத்திலும் உலக சாதனை கின்னஸ் புத்தகத்திலும் கெவின் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில்,முதல்வர் ஸ்டாலினுக்கு கெவின் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,”மரியாதைக்குரிய முதல்வர் ஸ்டாலின் மாமாவுக்கு,என் பெயர் ஆர்.கெவின் ராகுல்,நான் 2 ஆம் வகுப்பு படிக்கிறேன்.நான் ஆசிய அளவிலான சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளேன்.அது போல் இந்திய சாதனை புத்தகத்திலும் எனது பெயர் இடம்பெற்றுள்ளது.

 kevin raahul

நான் சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வருகிறேன்.மே 2ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள்.எனினும்,அன்றைய தினம்தான் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பிறந்தாளாகும்.ஏனெனில்,என் பிறந்த நாள் அன்றுதான்  தேர்தல் முடிவுகள் வெளியாகின.அதில்,நீங்கள் வெற்றி பெற்றதன் மூலம் அன்றைய நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக மாறியது.

உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஸ்டாலின் மாமா.நீங்கள் மக்களுடைய தலைவர்,மக்களுடைய முதல்வர்.நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.மாமா,உங்களிடம் கூற வேண்டிய இரண்டு சிறிய கோரிக்கைகள் எனக்கு உள்ளன.அதாவது,

  • தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும்.அது போல் கொரோனா தொற்று காலத்தில் பள்ளிக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும்.
  • 7 வயதில் ஒரு நிமிடத்தில் 150 கார்களின் லோகோக்களை அடையாளம் கண்டு சொல்வதில் உலக சாதனை படைத்துள்ளேன்.அதனால், உங்களிடம் இருந்து விரைவில் பாராட்டுகளை பெற காத்திருக்கிறேன்.

கலைஞர் தாத்தா போல உழைப்பும்,சுறுசுறுப்பும்,ஓய்வறியா தன்மையுடன் உங்கள் நல்லாட்சி தொடர,உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். உங்களின் வருங்கால திட்டங்கள், ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள்”,என்று கூறியுள்ளார்.இந்தக் கடிதம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Recent Posts

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

1 hour ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

3 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

5 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

6 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

6 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

7 hours ago