National Green Tribunal - Silanthi River [File image]
சிலந்தி ஆறு: மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறாமல் கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ள கூடாது என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதாக எழுந்த புகாரின் பெயரில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டது. இந்த விசாரணையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவது குறித்து விசாரணை நடைபெற்றது.
தென்மண்டல பசுமை தீர்ப்பாய விசாரணையில் கேரளா அரசு சார்பில் கூறுகையில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை எதுவும் நாங்கள் (கேரள அரசு) கட்டவில்லை. உள்ளூர் மக்களின் நீர் தேவையை தீர்க்க சிறிய நீர் தடுப்பு குளம் போன்று தான் கட்டினோம் என கூறினர். இதனை ஏற்றுக்கொள்ளாத பசுமை தீர்ப்பாயம், சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டுமான பணிகள் மேற்கொள்ள கேரள அரசுக்கு தடை கூறியது.
மேலும், தடுப்பணை, சிறிய குளம் போன்ற அமைப்பு என நீர்நிலைகளுக்கு குறுக்கே எந்த கட்டுமான பணிகள் மேற்கொண்டாலும் மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும் என கூறியுள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணை வரும் ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்.
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால் அமராவதி ஆற்றுக்கு நீர் வரத்து பெருமளவு குறைந்துவிடும் என்றும், இதனால், திருப்பூர், கரூர், திண்டுக்கல் பகுதி மாவட்ட விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவர் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள், விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…