கேந்திரிய வித்யாலயா பள்ளி – துணைத் தேர்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு 3 வாரங்களில் துணைத் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை என மாணவர்கள் சார்பில் வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு ஆணையிட்டுள்ளது. ஒரு படத்தில் தோல்வி, ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களிடையே பாரபட்சம் காட்டுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு பள்ளிகளில் சேர மாற்று சான்று வழங்குவதற்காகவே 2018ல் ஒரு மாணவிக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணை தேர்வு எழுத அனுமதி இல்லை எனவும் பள்ளி நிர்வாகம் சார்பில் கூறியுள்ளனர். மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, ஒரேயொரு முறை நடவடிக்கையாக துணைத்தேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி தண்டபாணி கூறியுள்ளார்.