கீழடியில் நிறைவுபெறவுள்ள 6- ம் கட்ட அகழாய்வு பணிகள்.. பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் தீவிரம்!

Default Image

கீழடியில் 6 -ம் கட்ட அகழாய்வு பணிகள் செப்டம்பர் 15- ம் தேதிக்குள் முடிவுபெறவுள்ள நிலையில், பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகளை ஆய்வாளர்கள் தொடங்கியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 6- ம் கட்ட அகழாய்வு, 40 லட்ச ருபாய் செலவில் கடந்த பிப். 19- ம் தேதி தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு, தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் 24 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த 6- ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், எடைக்கற்கள், ஓடுகள், குவளைகள், நாணயங்கள், மனித எலும்புக்கூடுகள், சங்குகள், கரிம படிமங்கள், பானைகள் என மொத்தம் மொத்தம் 1786 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள், செப்டம்பர் 15- ம் தேதிக்குள் முடிவடையவுள்ள நிலையில், கண்டறியப்பட்ட பொருட்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் பணியை ஆய்வாளர்கள் தொடங்கியுள்ளனர். அந்த குழி அமைந்துள்ள இடங்கள், கண்டெடுத்த பொருட்கள் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தற்பொழுது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்