கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியளிக்கிறது – ஜோதிமணி எம்.பி

Default Image

கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியளிக்கிறது என ஜோதிமணி எம்.பி ட்வீட்.

கரூர் மாவட்டம், வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி, அதே பகுதியில் அருகாமையில் வசித்து வருகிறார். இந்த  நிலையில்,அந்த மாணவி நேற்று மாலை மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டுள்ளார்.

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை மீட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, கரூர் மாவட்டம் வெங்கமேடு காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பதாக கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்த தற்கொலை குறிப்பில், தான் பாலியல் தொல்லை காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், தொந்தரவு கொடுத்ததாக எந்த நபரையும் குறிப்பிடவில்லை. இந்த கடிதத்தில் யாரையும் குறிப்பிடாததால், இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியளிக்கிறது. கரூர் காவல்துறை கண்காளிப்பாளர் அவர்களிடம் பேசினேன். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வருகின்றனர். விரைவில் குற்றவாளியை கண்டுபிடித்துவிடுவோம் என்று உறுதியளித்துள்ளார்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்