ஒரு வருட உண்டியல் பணத்தை நிவாரண நிதியாக வழங்கிய கரூர் சிறுமி.!

Published by
மணிகண்டன்
கரூர் சங்கமும் அறக்கட்டளைக்கு சிறுமி கன்யா தனது ஒரு வருட உண்டியல் சேமிப்பு பணமான 2,040 ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கமம் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் ஆதரவற்றவர்கள் மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அறக்கட்டளையினர் கடந்த சில மாதங்களாக கரூரில் சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளதால், தற்போது இந்த தொண்டு நிறுவனமானது ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருவதோடு மட்டுமில்லாமல் ஏழை மக்களுக்கு நிவாரண உதவியாக அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
சங்கமம் அறக்கட்டளையின் நல்ல நோக்கத்தை அறிந்த கரூர் ஆத்தூர் பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர் தனது மகள் கன்யா-வின் ஒரு வருட உண்டியல் சேமிப்பு பணமான 2,040 ரூபாயை சங்கமம் அறக்கட்டளை நிர்வாகிகளான உதயகுமார், சரவணன், செல்வராஜ் ஆகியோரிடம் நேரில் சென்று கொரோனா நிவாரண நிதியாக வழங்கினர். நிவாரண தொகையை பெற்றுக்கொண்ட சங்கமம் அறக்கட்டளையினர் சிறுமி கன்யாவிற்கு தங்களது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தனர்.
Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

4 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

9 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago