கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு….!

Default Image

கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, பரப்புரையில் மாட்டுவண்டியில் மணல் அள்ளுங்கள், தடுத்தால் அதிகாரி அங்கு இருக்க மாட்டார் என சர்ச்சையான முறையில் பேசியதாக குற்றசாட்டுக்கள் எழுந்த நிலையில், அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, செந்தில் பாலாஜி, சர்ச்சையான முறையில் பேசியது தொடர்பாக தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில், அவர் மீது, அரசு அதிகாரிகளை மிரட்டுதல், பனி செய்ய விடாமல் தடுக்க முயற்சித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், கரூர் நாகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்