இந்திரா காந்தி பற்றி கருணாநிதி இப்படி பேசியிருக்கிறார்.! – ஹெச்.ராஜா.!

Published by
பாலா கலியமூர்த்தி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்து வார தாள் ஒன்றில் வெளிவந்த பழைய நிகழ்வை சுட்டிக்காட்டிய ஹெச்.ராஜா.

தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாஜக சார்பில் மாநிலக் குழு செயலாளர் கரு. நாகராஜனும், காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் தொகுதி எம்.பி.ஜோதிமணியும் மற்றும் பல்வேறு கட்சி சேர்த்தவர்கள் கலந்துகொண்டனர். இதில், கரு.நாகராஜன் பேசும்போது, எம்.பி. ஜோதிமணியை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். மேலும், அவருடைய பேச்சில் ஜோதிமணியை ஒருமையில் குறிப்பிட்டுப் பேசினார். இந்தப் பேச்சுக்குக் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்து, உடனடியாக விவாதத்திலிருந்து வெளியேறினார்.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி, கரு.நாகராஜனுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஜோதிமணிக்கு ஆதரவாகப் பலரும் கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். கரு.நாகராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஒருபக்கம் ஹெச்.ராஜா, அவரது ட்விட்டர் பக்கத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்கள், பெண் என்பதால் எவ்வளவு மரியாதையோடு திருமதி.இந்திரா காந்தி அவர்களை பற்றி பேசியுள்ளார் என்றும் இந்த மாதிரி கரு.நாகராஜன் அவர்களுக்கு பேசத் தெரியவில்லையே என்று பதிவிட்டுள்ளார். 

அதாவது, மதுரையில் பொதுக் கூட்டத்தில் திமுகவினர் நடத்திய போராட்டத்தில் இந்திரா காந்தி அம்மையாருக்கு கல்லடி பட்டு தலையில் ரத்தம் ஒழுகியதை திமுக தலைவர் கருணாநிதி அம்மையாருக்கு மாதவிலக்காய் இருந்திருக்கும் என்று சொல்லி தமிழனின் திராவிட பெருமையை தரணிக்கு காட்டினார் என்று ஒரு வார தாளில் வெளிவந்த செய்தியை ஹெச்.ராஜா சுட்டிக்காட்டினார்.

மேலும் மற்றோரு பதிவும் போட்டுள்ளார். அதில், கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவது ரசிக்காது. கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம். அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் தொலைக்காட்சிகளில் மாண்புமிகு பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும், அதே பாணியில் Tit for Tat நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

2 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

4 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

4 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

4 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

5 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

6 hours ago