கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Default Image
ஏர்செல் – மேக்ஸிஸ் விவகாரம் தொடர்பாக  கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர் .

டெல்லி, சென்னை உட்பட கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை முதல் இந்த சோதனை நடந்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஏர்செல் – மேக்ஸிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்புடைய வழக்குகளுக்காக, கடந்த ஆண்டும், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வழக்கு விவரம்:
மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத் தருவதற்காக மொரிஷியஸில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றம் சாட்டியது. இது தொடர்பாக சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ ஏற்ககெனவே சோதனை நடத்தியது.
இதுமட்டுமின்றி, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் மற்றும் வாசன் ஹெல்த்கேர் நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்தது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் முதலீடு செய்வதற்கான எப்ஐபிபி ஒப்புதல் பெறுவதற்காக, அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் நிறுவனம் உதவி செய்துள்ளது. இதற்காக கார்த்தி சிதம்பரத்துடன் தொடர்புடைய இந்த நிறுவனத்துக்கு ஆலோசனை கட்டணமாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்