பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் முகலாயர்கள் – மோடியை கிண்டலடித்த கார்த்தி சிதம்பரம்

Published by
பாலா கலியமூர்த்தி

பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் முகலாயர்கள் என்று கூறி பிரதமர் மோடியை கிண்டலடித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்தல் பேட்டை உயர்த்தி காண்பிப்பார்கள். அதுபோன்று பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்ததால், பிரதமர் மோடியும், நிர்மலா சீதாராமனும் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சரும் பேட்டை உயர்த்தி காண்பிக்க வேண்டியது தான் என்று விமர்சித்துள்ளார்.

இதனுடைய பொருளாதார சீர்குலைவுக்கு காரணம் மத்திய அரசு தான். பணமதிப்பு நீக்கம், குழப்பமான ஜிஎஸ்டி மற்றும் ஊரடங்கால் பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது என கூறியுள்ளார். இதனால் இவர்களுக்கு வருவாய் வரவேண்டும் என்பதற்காக பல வரிகளை போட்டுள்ளார்கள். வாரிசுமையை அதிகரித்து கொண்டே சென்றதால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை வெளிநாட்டு சந்தையில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதைவிட குறைவாகத்தான் உள்ளது. நாங்கள் இருக்கும்போது 100 டாலர் விற்றது. தற்போது 60 டாலருக்குத்தான் விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், அவர்களின் வாரி சுமையால் பெட்ரோல் விலை ரூ.100 ஆக வந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியை விட்டு செல்லும்போது, ரூ.70 ஆக இருந்தது என தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் சாசனத்துக்கு, இந்திய கூட்டமைப்புக்கு விரோதமானது தான் இந்த செஸ் வரி. பெட்ரோல் உயர்வுக்கு காரணம் காங்கிரஸ் தான் என்று மோடி கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் முகலாயர்களாக இருப்பார்கள் என நினைக்கிறன் என பிரதமர் மோடியை கிண்டலடித்து பதில் தெரிவித்துள்ளார்.

பிரதமராக 7 ஆண்டுகள் ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கும் பிரதமர் மோடி, கடந்த காங்கிரஸ் ஆட்சியால் தான் பெட்ரோல் விலை உயர்கிறது என்று கூறுவதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். வரி கூட்டிக்கொண்டு போவதால் விலை ஏறுகிறது. அதை குறைக்க வேண்டியது தானே என்றும் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் கூட இங்க பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

38 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

51 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

1 hour ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

2 hours ago