கார்த்தி நடிப்பில் வரும் தீபாவளி அன்று கைதி திரைப்படம் வெளியாக உள்ளது. அதனை அடுத்து ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சுல்தான் என தலைப்பிடப்பட்டிருந்தது.
தற்போது இப்பட ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லில் உள்ள இந்து அமைப்பின்னர் இப்பட ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காரணம் இப்படம் சுல்தான் என தலைப்பிடப்பட்டு, குறிப்பிட்ட சமூகல்தினரை தூண்டிவிடும் வகையில் படம் எடுக்கப்படுகிறது. எனவும், இஸ்லாமியத்தை சேர்ந்த திப்பு சுல்தானின் வாழ்வை மையப்படுத்தி எடுக்கப்படுவதாகவும் இந்து அமைப்பினர் குற்றம் சாட்டினார்.
பின்னர், இப்பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டு, படக்குழு அவ்விடத்தில் இருந்து கிளம்பிவிட்டனர். இதனை தொடர்ந்து, படக்குழு சார்பாக வந்த தகவலின்படி, இந்த படம் வரலாற்று பின்னணி கொண்ட படம் அல்ல என தெரிவிக்கப்பட்டது. மேலும் மக்களுக்கு எதனை காண்பிக்க வேண்டும் எதனை காண்பிக்க கூடாது என தேர்வு செய்ய அரசின் சென்சார் குழு உள்ளது. அதே போல எதனை படமாக்கவேண்டுமே என சுதந்திரம் படைப்பாளிகளுக்கு இருக்கிறது. இப்படி இருக்க இடையில் சுய விளம்பரத்திற்கு சில அமைப்பில் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என படக்குழு தெரிவித்தது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…