காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
காவிரி -குண்டாறு இணைப்பு மூலம் தமிழகத்தில் கூடுதலாக 45 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் எங்களுக்கு காவிரி இருந்து கிடைக்கக்கூடிய தண்ணீர் அளவு குறைந்துவிடும் என்ற காரணத்தினால் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது.
காவிரி ,குண்டாறு, வைகை அணை இணைப்பு திட்டத்தால் வெள்ள காலங்களில் காவிரியில் உபரி நீராக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் தடுத்து. திருச்,சி தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் பாசனக் கால்வாய்களை வெட்டி இணைப்பதன் மூலமாக இப்பகுதியில் நீர்வளம், நிலவளம் பெறும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
கர்நாடக அரசின் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
1958- ஆம் ஆண்டு காவிரி, குண்டாறு, வைகை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு ரூ.3290 கோடியில் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை 14,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்போவதாக கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…