மங்களூரு குக்கர் வெடிப்பு சம்பந்தமாக மைசூரில் 2 பேரிடமும், கோவையில் ஒருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. – கர்நாடக ஏடிஜிபி தகவல்.
2 நாட்களுக்கு முன்னர்கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் ஆட்டோ ஓட்டுனரும், பயணித்தவரும் படுகாயமடைந்தனர். அது குறித்து கர்நாடக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், தமிழகத்தில் உதகையில் ஒருவரிடமும், நாகர்கோவிலில் ஒருவரிடமும் சிம் கார்டு வாங்கியது மற்றும், அதில் தொடர்பு கொண்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த குக்கர் வெடிப்பு சம்பந்தமாக கர்நாடக ஏடிஜிபி பேசுகையில் இந்த சம்பவம் தொடர்பாக மைசூரில் 2 பேரிடமும், கோவையில் ஒருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைக்கு வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான விசாரணைக்கு தமிழக காவல்துறை கர்நாடக செல்வதாகவும், கர்நாடக காவல் துறை தமிழகம் வருவதாகவும் தகவல் ஒன்று பரவியது. ஆனால் இது தவறான தகவல் என காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…