காரைக்கால் பள்ளி மாணவன் மரணம்.! 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்.! மேலும் ஓர் முக்கிய உத்தரவு….

Published by
மணிகண்டன்

காரைக்கால் பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்ய புதுசேரி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

காரைக்கால் பள்ளி மாணவன் பாலமணிகண்டன் சில நாட்களுக்கு முன்னர் குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார். சக மாணவியின் தயார் சகாயராணி, தன் மகளை விட நன்றாக படித்து விட கூடாது என நினைத்து விஷம் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது.

மாணவனுக்கு விஷம் கொடுத்தது சகாயராணி தான். ஆனால், அவன் உயிரிழந்ததுக்கு காரணமாக, காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சிய போக்கே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றசாட்டு வலுத்தத்தை அடுத்து புதுசேரி அரசு, 3 பேர் கொண்ட மருத்துவ குழுவை அமைத்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கோரியது. அந்த குழு நேற்று சுகாதார துறை செயலாளரிடம் இந்த அறிக்கையை தாக்கல் செய்தது.

அதன் படி , மாணவன் விஷம் அருந்திய நிலையில், வாந்தி மயக்கம் என அரசு மருத்துவமனையில் அவரச பிரிவுக்கு வருகையில், அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல், வீட்டுக்கு அனுப்பிவிட்டனராம். அதன் பின்னர் மீண்டும் அதே போல உடல் நல குறைவு ஏற்ப்படவே, அதன் பின்னர் மீண்டும் மருத்துவமனை அழைத்து வரப்பட்ட அதன் பின்னர் அளிக்கப்பட்ட சிகிச்சையின் பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட விஜயகுமார், பாலாஜி எனும் இரு மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுசேரி முதல்வருமான ரங்கசாமி. மேலும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியாற்ற உத்தரவு பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என மொத்தமாக 42 பேர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியாற்றாமல்,

புதுசேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வேலை பார்ப்பது முதலவர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவர்கள் உடனடியாக காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியாற்ற தொடங்க வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கான சம்பளம் கொடுக்கப்பட மாட்டாது எனவும் முதல்வர் கூறியுள்ளாராம். இது தொடர்பான அரசு உத்தரவு இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

22 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

30 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

39 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

47 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

54 mins ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago