விஷம் கொடுத்து உயிரிழந்த பள்ளி மாணவனின் உயிரிப்புக்கு அலட்சியமாக நடந்து கொண்ட அரசு மருத்துவமனையின் போக்கே காரணம் என காரைக்கால் மாவட்டத்தில் முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய சம்பவம் என்றால் தன மகளுடன் படிக்கும் சக மாணவன் படிப்பில் தன் மகனை முந்திவிட கூடாது என சக மாணவியின் தாயார் அந்த மாணவனுக்கு விஷம் கொடுத்த கொலை செய்த சம்பவம் தான்.
இதில் தயார் சகாயராணி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். விஷம் கொடுத்தது சகாயராணி என்றாலும், அதன் பின்னர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை கொடுக்காததால் தான் மாணவன் உயிரிழந்தான் என ஒரு குற்றசாட்டு பலமாக எழுந்துள்ளது.
அதன் காரணமாக மூன்று பேர் அடங்கிய மருத்துவ குழு அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகிறது. இதன் அறிக்கையை புதுசேரி அரசிடம் சமர்ப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று காரைக்கால் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடைபெற்று வருகிறது. அலட்சியமாக செயல்பட்ட காரைக்கால் மருத்துவமனைக்கு எதிராகவும், மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாலும் அதனை சரி செய்ய அரசுக்கு கவனம் ஈர்க்கும் வகையில் இந்த கடையடைப்பு நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. இதில் சுமார் 10,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…