கன்னியாக்குமரி:கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்களுக்கு இன்று(டிச.24 ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வரும் டிச.25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.இதனை முன்னிட்டு இன்று இரவிலிருந்தே தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அந்த வகையில்,தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
பொதுவாக,மற்ற மாவட்டங்களை விட கன்னியாக்குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெறும்.இதனால்,டிச.25 ஆம் தேதி அரசு விடுமுறை என்றாலும்,ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் முன்னதாகவே டிச.24 ஆம் தேதி கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.
இந்நிலையில்,கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாக்குமரி மாவட்டத்தில் இன்று (24 ஆம் தேதி)உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதன்படி,கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் இன்று (24 ஆம் தேதி)உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏதுவாக ஜனவரி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…