#முக கவசத்தோடு_கந்தர்கவசம்#வழங்க ஆதினம் உத்தரவு!

Published by
kavitha

பொதுமக்களுக்கு முக கவசத்தோடு கந்தர் சஷ்டி கவசத்தையும், முருக பக்தர்கள் வழங்க காமாட்சிபுரம் ஆதினம் உத்தரவுப்பிறப்பித்துள்ளார்.

கோவை, காமாட்சிபுரம் ஆதினம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:

இந்து தர்மம் காலத்தால் தொண்மையானது. அதிலும் முருக வழிபாடு என்பது மிக முக்கியமானது.மேலும் மலேசியா, இலங்கை, பர்மா மற்றும் போன்ற நாடுகளில் எல்லாம் பல கோவில்களில் முருகன் சிலைக்கு பதிலாக வேல் தான் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. முருகனின் சிறப்பை பல அடியார்கள், புலவர்கள் எல்லாம் பாடியுள்ளனர்.

கந்த சஷ்டி கவசம் என்பது தேவராய சுவாமிகளால் அருளப்பட்டது. கவசம் என்பது உச்சிமுதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளையும் காக்க கடவுளை பிரார்த்திக்கும் ஒன்றாகும்.

கந்தர் சஷ்டி கவசத்தை இழிவுபடுத்துவதை, காவடிக்குழு பக்தர்கள், இனி பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அரசுதக்க நடவடிக்கை இதற்கு எடுக்க வேண்டும். மேலும் வரும் ஆக9ம் தேதி சஷ்டி அன்று முருக பக்தர்கள், காவடிக்குழுவினர் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசத்தோடு, கந்தர்சஷ்டி கவசத்தையும் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வழங்க வேண்டும்.அதேபோல பங்குனி உத்திரம், தை பூசத்துக்கு திடும்பு இசை வைத்திருப்பவர்களும் சஷ்டி அன்றும் இசை வாசித்து முருகன் அருளால் தீயவர்களுக்கு நல்ல புத்தி வர பிரார்த்தனை செய்வோம் என்று கூறினார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago