கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளச்சந்தை எனும் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் கருப்புக்கோடு எனும் பகுதியை சேர்ந்த ராஜ்யஸ்ரீ என்பவரைகடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
திருமணமான ஒரு மாதத்திற்குள்ளாகவே அவர் கணவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் காலை வேளையில் தன் மனைவி ராஜ்யஸ்ரீயை காணவில்லை என வேல்முருகன் தேடியுள்ளார். ஆனால், அவர் கிடைக்கவில்லை. பிறகு ராஜ்யஸ்ரீ வீட்டருகே உள்ள சந்தோஷ் என்பவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
சம்பவ நாளன்று வேல்முருகன் வாட்சாப்பிற்கு ‘ உன்னை எனக்கு பிடிக்கவில்லை அதனால் நான் உன்னை விட்டு பிரிகிறேன்.’ என வாய்ஸ் செய்தியை ராஜ்யஸ்ரீ அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து, தன் மகன் திருமணமான பெண்ணை கூட்டி சென்றதாக கூறி, அதனால் மனமுடைந்து சந்தோஷ் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, காணாமல் போன ராஜ்யஸ்ரீ, சந்தோஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…