கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்கலாம் – ஐகோர்ட் அனுமதி

Published by
பாலா கலியமூர்த்தி

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்க பள்ளி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள  மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் தொடங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மற்ற வகுப்புகளை தொடங்குவது குறித்து ஒரு மாதத்திற்கு பிறகு முடிவெடுக்கப்படும் என உயர்  நீதிமன்றம் நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து கடந்த ஜூலை 17-ஆம் தேதி வன்முறை ஏற்பட்ட நிலையில்,அன்று முதல் பள்ளி மூடப்பட்டது. இதனையடுத்து பள்ளி சீரமைப்பு பணி சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

இந்த சமயத்தில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டதால் மீண்டும் திறக்க கோரி பள்ளி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளை தொடங்கலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பள்ளி உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 21க்கு ஒத்திவைக்கப்பட்டது. கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் பள்ளி நிர்வாகம் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

7 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

19 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

35 mins ago

மணிமேகலை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

38 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

45 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

50 mins ago