கந்த சஷ்டி சர்ச்சை வீடியோ விவகாரம்! கறுப்பர் கூட்டம் சுரேந்திரனிடம் போலீசார் விசாரணை!

Default Image

 கறுப்பர் கூட்டம் சுரேந்திரனிடம் போலீசார் விசாரணை.

 தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம், கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில், கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்நிலையில், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்