ஒப்பந்த ஆசிரியை தற்கொலை.! அரசு பள்ளி ஆசிரியை திட்டியதால் இந்த முடிவு.? போலீசார் தீவிர விசாரணை…

Default Image

மாங்காடு அரசு பள்ளி ஆசிரியை இன்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஒப்பந்த ஆசிரியர் ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு காரணமாகஅரசு பள்ளி ஆசிரியை தான் என கூறி உறவினர்கள் பள்ளி வளாகத்தில் கூடியதால் பரபரப்பு நிலவி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அரசு பள்ளியில் ஒப்பந்த பெண் ஆசிரியராக சௌபாக்யவதி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் இன்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதற்கு காரணமாக, அதே அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுபவர் தரைகுறைவாக திட்டியதன் காரணமாக தான் ஒப்பந்த ஆசிரியை தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டி பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

தற்போது இந்த வழக்கை மாங்காடு காவல்துறையினர் பதிவு செய்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்