நெல்லை மாவட்டத்தில் உள்ள சுரண்டை பகுதியில் காமராஜர் விழாவை கோலாகலமாக கொண்டாட எண்ணி காமராஜர் ரத்ததான கழகம் சார்பில் நேற்று இரவு பேனர் மற்றும் கட் அவுட் அமைக்கும் பணியில் அதே பகுதியை சேர்ந்த மணி, சரவணன் , அரவிந்தன் உட்பட சில வாலிபர்கள் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
அப்போது அவர்கள் மேலே ஏறி கட்டிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீச பட்டுள்ளனர்.இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் அவர்களை மீட்டு தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே மணி,சரவணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் அரவிந்தனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளில் இந்த சம்பவம் நடந்தை எண்ணி அந்த பகுதி மக்கள் அனைவரும் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…