காமராஜரும் பிரதமர் மோடியும் ஒன்னா.? திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

Published by
பாலா கலியமூர்த்தி

சமீபத்தில் காமராஜருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு அதிமுகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்தவகையில், கர்மவீரர் காமராஜரும் பிரதமர் மோடியும் ஒன்னா.? என்பது பொதுமக்களுக்கே நன்றாகவே தெரியும் என அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

திண்டுக்கலில் புதிதாக சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசனிடம், காமராஜருடன் மோடியை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், காமராஜர் யார்..? மற்றவர்கள் யார்..? காமராஜர் எப்படிப்பட்டவர், மற்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும்.

திருச்சியில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி.! 14 இடங்களில் அனுமதியில்லை

இதுகுறித்து நான் கூற வேண்டிய அவசியம் இல்லை என பதிலளித்தார். இதற்கு முன் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது, கூட்டணி விலகல் தொடர்பாக அண்ணாமலை கூறியது, அவருடைய கட்சியின் கருத்தை தெரிவித்திருக்கிறார். பாஜகவில் இருந்து நாங்கள் ஏன் வெளியே வந்தோம் என்பதை எங்கள் வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாகத் தெரிவித்து இருக்கிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காரணத்தை சொல்லியிருக்கிறோம். திருப்பித் திருப்பி கூற வேண்டிய அவசியம் கிடையாது. ஏன் வெளியே வந்தோம் என தமிழக மக்களுக்கும், அதிமுகவினருக்கும் நன்றாக தெரியும் என்று தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஓட்டு எண்ணும்போது தான் தெரியும், அதுவரை யாரு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் தான் எந்த கட்சி எங்கங்கே உள்ளது என்பது தெரியவரும். எனவே, நாங்கள் பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்து விட்டோம். நாடாளுமன்ற தேர்தலில்  அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து எதிர்கொள்வோம் என்றும் அயோத்தி கோயில் திறப்பு விழாவிற்கு செல்வது குறித்து அப்போதைய சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago