ராமநாதபுரத்தில் பிப்ரவரி 21ம் தேதி அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக கூறிய கமல்ஹாசன், பிப்ரவரி 24ம் தேதி மாநாடு நடத்தப்படாது என தெரிவித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் தமது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். பின்னர், தமது இல்லத்துக்கு வெளியே கூடியிருந்த ரசிகர்களிடையே உரையாற்றிய நடிகர் கமல்ஹாசன், மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமது அரசியல் பயணத்தில் இன்னும் பலர் இணைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சி பெயரை அறிவித்து, மக்களைச் சந்திக்க இருப்பதாகவும் கூறினார். பிப்ரவரி 24ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்த இருப்பதாக வெளியான தகவல் வெறும் புரளி என்றும், பிப்ரவரி 21 முதல் 3 நாட்களுக்கு மக்களை சந்திக்க இருப்பதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…