கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிப்ரவரி 15 க்கு பின் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்துள்ளவர்களின் வீடுகள் குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அதனை குறிப்பிடும் வகையில் அந்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.
அவ்வாறு நோட்டீஸ் ஒட்டிய வீட்டில் உள்ள யாரும் குறிப்பிட்ட நாள் வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீட்டிலும் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சை நிலவி வருகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து, கருத்து தெரிவித்த சென்னை மாநகராட்சி ஊழியர், ‘ வெளிநாடு செண்டு வந்தவர்களின் பாஸ்போர்ட் முகவரியை கொண்டு இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது. பாஸ்போர்ட்டில் இருந்த பழைய முகவரி கொண்டு தவறுதலாக கமல்ஹாசன் வீட்டில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டது.’ என விளக்கம் அளித்தார். பின்னர் அந்த கொரோனா நோட்டீஸ் அங்கிருந்து அகற்றப்பட்டது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…