கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிப்ரவரி 15 க்கு பின் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்துள்ளவர்களின் வீடுகள் குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அதனை குறிப்பிடும் வகையில் அந்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.
அவ்வாறு நோட்டீஸ் ஒட்டிய வீட்டில் உள்ள யாரும் குறிப்பிட்ட நாள் வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீட்டிலும் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சை நிலவி வருகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து, கருத்து தெரிவித்த சென்னை மாநகராட்சி ஊழியர், ‘ வெளிநாடு செண்டு வந்தவர்களின் பாஸ்போர்ட் முகவரியை கொண்டு இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது. பாஸ்போர்ட்டில் இருந்த பழைய முகவரி கொண்டு தவறுதலாக கமல்ஹாசன் வீட்டில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டது.’ என விளக்கம் அளித்தார். பின்னர் அந்த கொரோனா நோட்டீஸ் அங்கிருந்து அகற்றப்பட்டது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…