மக்கள் நீதி மய்யம்: பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

Default Image
ஸ்ரீபிரியா, சினேகன் உள்ளிட்டோர் கமல்ஹாசன் கட்சி பேச்சாளர்களாக நியமனம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தலைமைப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சினேகன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன் அதன் நிர்வாகிகளை மேடையில் அறிமுகப்படுத்தினார். பின்னர் இன்று கட்சியின் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு: மக்கள் நீதி மய்யத்தின் பேச்சாளர்களாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மெளர்யா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜன், பேராசிரியர் ஞான சம்பந்தன், திரைப்பட தயாரிப்பாளர் கமிலா நாசர், இயக்குநர் முரளி அப்பாஸ், தொழிலதிபர்கள் சிவராமன், செளரி ராஜன், நடிகை ஸ்ரீபிரியா, பாடலாசிரியர் சினேகன் ஆகியோரும் பேச்சாளர்களாக நியமிக்கப்படுகின்றனர் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திடுங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்