தமிழகம் முழுவதும் (சென்னை தவிர) டாஸ்மாக் மதுபான கடைகள் வரும் 7ஆம் தேதி முதல் குறிப்பிட்ட நேரக்கட்டுப்பாடு மற்றும் விதிகளுக்குட்பட்டு திறக்கப்படும் என அரசு அறிவித்ததை அடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையான கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதிலும் தலைநகர் சென்னை தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நகரமாக மாறி வருகிறது. இந்த கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வரும் 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது.
அரசின் இந்த முடிவு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையான கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், ‘ கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, தற்போது டாஸ்மாக்கை திறக்க போகிறதாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா?’ என பதிவிட்டுள்ளார்.
சென்னையில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டு வருவதால், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்
கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…