இன்று முதல் இரண்டாம் கட்டமாக கமல்ஹாசன் 6 மாவட்டங்களில் பரப்புரை

Default Image

இன்று  முதல் இரண்டாம் கட்டமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன. இதனிடையே , ரஜினியும் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சட்டமன்ற தேர்தல் குறித்த பிரச்சாரத்தில் கடந்த 13-ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். முதல் கட்டமாக சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெயரில் தூத்துக்குடி கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை கமல்ஹாசன் மேற்கொண்டார்.இந்நிலையில் கமல்ஹாசனின் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை திட்டம் வெளியாகியுள்ளது.இன்று முதல் 6 மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

அதாவது, இன்று ,நாளை ,நாளை மறுநாள் காஞ்சிபுரம்,விழுப்புரம் ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,திருவண்ணாமலை,கடலூர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கமல்ஹாசன்.அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்