குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதற்கு கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.கமலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அவர் தெரிவித்த கருத்தில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால், நாட்டின் பாரம்பரியத்தை அழிப்பதற்கு அதிகாரமில்லை. மக்களின் கையில் இருக்கும் வரையில் தான் அது ஜனநாயகம். மக்களுக்கு எதிராக செல்லும் இந்த தனிநாயகத்தை ஒழிக்கும் வரையில் நான் ஓய மாட்டேன் . நாம் யாருமே ஓயக்கூடாது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், கமல்ஹாசனுக்கு அரசியல் சட்டமும், நாடாளுமன்ற நடவடிக்கைகளும் தெரியவில்லை.குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா பற்றி அறியாதவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்குவது பற்றிய முதல்வரின் கோரிக்கையை பிரதமர் பரிசீலிப்பார் என்று தெரிவித்தார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…